• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருதமலை பக்தர்களுக்கு மருத்துவ வசதி

December 31, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 30 ஆயிரத்து 627 கோவில்கள் உள்ளன. இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபலமான 10 கோவில்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ மையத்தை வெள்ளியன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மருத்துவ மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ மையத்தை பார்வையிட்டு அங்கு பணியாற்ற உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த மருத்துவ மையத்தில் இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர் இவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பணியாற்ற உள்ளனர் இந்த மருத்துவ மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க