• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வந்த ராஜலட்சுமி மாண்டாவிற்கு குயில் கும்மியாட்டம் ஆடி அசத்தல் வரவேற்பு

December 30, 2021 தண்டோரா குழு

புல்லட் ராணி என அழைக்கப்படும் ஆசிரியை ராஜலட்சுமி மாண்டா தேசிய ஒற்றுமை,பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி டில்லியிலிருந்து கேரளா வரை பெண்கள் மேலாண்மை விழிப்புணர்வு யாத்திரையை துவக்கினார்.11 மாநிலங்கள் வழியாக 12 நாட்கள் சுமார் 4200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து கேரளாவில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ள இவர், கோவை வந்தார்.கோவை நவக்கரை பகுதிக்கு வந்த ராஜலட்சுமி மாண்டா குழுவினருக்கு நம்ம நவக்கரை மகேஷ் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

நவக்கரை ஏ டூ பி ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதற்கான விழாவில், லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா மாநில துணைதலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக தேசிய தலைவர் ஸ்ரீ குருஜி,தேசிய செயலாளர் ராம்சந்திரா ரெட்டி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில்,நவக்கரை நவீன் பிரபஞ்ச குழுவினர் அசத்தலாக ஒயில் கும்மியாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பேசிய ஆசிரியை ராஜலட்சுமி மாண்டா,

மத்திய அரசு பெண்களின் திருமண வயது வரம்பை 21 ஆக உயர்த்தியதை தாம் வரவேற்பதாகவும்,இதனால் பெண்களுக்கு கூடுதலான சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும், ,இதனால் பெண்கள் தங்களது கல்வி,வேலைவாய்ப்புகளை பெற கூடுதல் நேரங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் பெண்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

விழாவில் மதுக்கரை ஒன்றிய முன்னால் தலைவர் சண்முக சுந்தரம்,மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க