• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு – த.பெ.தி.கவினர் கைது

December 30, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சியை தடுத்து நிறுத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் சாகா பயிற்சியை நடத்திவருகின்றனர். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கல்வி நிலையங்களில் இதுபோன்ற பயிற்சியை நடத்தக்கூடாது மதவெறி கூடாரங்களாக மாறக்கூடும் என்று கூறி இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து சாகா பயிற்சியை கல்வி நிலையங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் படிக்க