• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குப்பைகளை சேகரிக்க சென்ற தூய்மைபணியாளரை தாக்கிய வடமாநில இளைஞர்

December 30, 2021 தண்டோரா குழு

கோவை ரங்கேகவுண்டர்வீதி, காட்டான் சந்து என்ற இடத்தில் வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள், ஜோதியம்மாள், குப்புராஜ் ஆகியோரை வடமாநிலத்தை சேர்ந்த வினோத் தாக்கியுள்ளார்.

குட்கா பயன்படுத்திய பிளாஸ்ட்டிக் கவர்களை மக்கும் குப்பையில் கொட்டியதை கேட்ட ஜோதியம்மாள் முகத்தில் உமிழ்ந்து, காபி பிளாஸ்கால் தாக்கியுள்ளார். இதில் கண் அருகே காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டிய நிலையில் அருகில் இருந்தவர்கள் ஜோதியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துப்புரவு பணியாளர் ஜோதியம்மளை கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.குப்பை சேகரிக்க சென்ற கோவை மாநகராட்சி தூய்மை பணியாளரை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க