• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வியட்நாம் வெள்ளத்தில் 8 பேர் பலி 4 பேர் காணவில்லை

December 17, 2016 தண்டோரா குழு

வியட்நாம் நாட்டில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர், 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டின் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:

வியட்நாம் நாட்டில் பெய்துவரும் கன மழையால் பின்ங் தின்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று கான்ஹ் மற்றும் துவா தியன் ஹியூ மாகாணங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடந்துக்கொண்டு வருகிறது.

இந்த வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைத்துள்ளது, ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டன. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் என்றார்.

இந்த கனமழை சனிக்கிழமை வரை தொடரும் என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் மூன்று முறை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 6௦பதுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க