• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்பிற்கு வழக்கு செம்மல் விருது

December 26, 2021 தண்டோரா குழு

பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்பிற்கு வழக்கு செம்மல் விருது வழங்கப்பட்டது.

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்.சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் இவர் கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை பணியாற்றி வந்தவர்.மேலும் பல்வேறு சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே இலவசமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது சட்ட விழிப்புணர்வு சேவையை பாராட்டி இதயங்கள் பேசட்டும் நிகழ்ச்சியில் வழக்கு செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு சட்டங்கள் குறித்து சரியான புரிதலை ஏற்படுத்தும் விதமாக சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும்,இது போன்ற விருதுகள் தம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க