• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்பிற்கு வழக்கு செம்மல் விருது

December 26, 2021 தண்டோரா குழு

பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்பிற்கு வழக்கு செம்மல் விருது வழங்கப்பட்டது.

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்.சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் இவர் கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை பணியாற்றி வந்தவர்.மேலும் பல்வேறு சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே இலவசமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது சட்ட விழிப்புணர்வு சேவையை பாராட்டி இதயங்கள் பேசட்டும் நிகழ்ச்சியில் வழக்கு செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு சட்டங்கள் குறித்து சரியான புரிதலை ஏற்படுத்தும் விதமாக சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும்,இது போன்ற விருதுகள் தம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க