• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 67 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் அமல்

December 23, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள் உள்பட 67 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகன விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சென்னையில் தொடங்கி வைத்தார்.இத்திட்டம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 16 அரசு மருத்துவமனைகள், 51 தனியார் மருத்துவமனைகள் என 67 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 15 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் அனைவருக்கும் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க