• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணை

December 22, 2021 தண்டோரா குழு

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

சசிகலா சிறைசென்ற பின்னர் கோடநாடு எஸ்டேட்டை விவேக் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது.முரண்பாடுகள் காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்து வாடகை காரில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் படிக்க