• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

December 22, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வட்டார அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காரமடை, பெ.நா.பாளையம் வட்டார இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையம் , சிறுமுகை சாலையிலுள்ள நஞ்சையா பாலிடெக்னிக் கல்லூரியில் டிசம்பர் 23 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் ஐடி, இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல், கார்மென்ட்ஸ், கட்டுமானம், விற்பனைத் துறை உள்பட பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே 8 ஆவது முதல் முதுகலைப் படிப்பு பயின்றவர்கள் வரை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இளைஞர்கள் தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் உள்பட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க