• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்

December 22, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோருடன், ஆணையத்தின் செயலர் சுந்தரவல்லி, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 18 வார்டுகள் 24 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி, சேலத்தில் தாரமங்கலம், இடங்கனசாலை ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு எண்ணிக்கை 15லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வார்டு மறுவரையின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆணையத்திடன் மனு அளித்தனர்.

மேலும் படிக்க