• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனவரி 21ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தை படுத்த முடிவு – நல்லுசாமி

December 21, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி ஜனவரி 21ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தை படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்து தமிழக எம்.எல்.ஏ க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்ப கோவை மாவட்ட மத்திய தபால் நிலையத்திற்கு வந்திருந்தார்.

“கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்த உணவு தேடும் உரிமை என கூறிய அவர் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைபடுத்த வேண்டுமென தமிழ்நாடு கள் இயக்கம் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

இது குறித்து அனைத்து எம்.எல்.ஏ க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர் இந்த கோரிக்கை நியாயமானது என்றால் ஆதரவு அளியுங்கள்.இல்லையெனில் வாதிட வாருங்கள். இரண்டும் இல்லையெனில் உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி என கேள்வி எழுப்பினார். இதற்கு எம்.எல்.ஏ க்கள் பதிலளிக்கவில்லை என்றால் விமர்ச்சிக்க வேண்டி வருமென தெரிவித்தார்.

மேலும் படிக்க