• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பள்ளி கட்டிடத்தின் தரத்தை அறிக்கையாக வழங்கவேண்டும் – கமிஷனர் உத்தரவு

December 21, 2021 தண்டோரா குழு

கோவை கணபதி கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடத்தின் தரம் குறித்த பட்டியலை விரைவில் அறிக்கையாக வழங்க பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூய்மைப்பணியை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.

அவர் கூறும்போது,

‘‘கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு 20 தூய்மைப்பணியார்கள், 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டு தினமும் ஒவ்வொரு மண்டலத்திலுள்ள 3 இடங்களைக் கண்டறிந்து சாக்கடையை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், மரக்கழிவுகளை அகற்றுதல் போன்று பணிகளை மேற்கொள்வார்கள்.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு புழுக்களை அழிக்கும் பணிகளை மேற்கொள்வதுடன் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து தெளித்தால் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்’’ என தெரிவித்தார். தொடர்ந்து, அத்திப்பாளையம் சாலை, சின்னவேடம்பட்டி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

உடையாம்பாளையம் பகுதியில் பயன்படுத்தாமல் இருந்த உள்விளையாட்டரங்கத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். பின்னர், கணபதி, கணேஷ் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியின் கட்டிடத்தன்மை மற்றும் தரம் குறித்து, ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த பட்டியலை விரைவில் அறிக்கையாக வழங்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க