• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – இருவர் மீது வழக்குப்பதிவு

December 19, 2021 தண்டோரா குழு

கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் பயணம் முடிந்து அந்தந்த எல்லைக்குட்பட்ட டிப்போக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று இரவு சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு இரண்டாம் நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவுக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவர் நடத்துனர் கவியரசன் மீது தாங்கள் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.

பின்னர் நடத்துனர் கவியரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சிங்காநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்தனர்.

இதையடுத்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க