• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதளம் வசதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்

December 17, 2021 தண்டோரா குழு

நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதளம் வசதிவிவசாயிகள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய ஏதுவாக தங்களது பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு வரும் 16ம் தேதி முதல் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க