• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்ட கோரிக்கை

December 15, 2021 தண்டோரா குழு

கோவை பயனீர் மில் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்ட கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

இந்த மாநகராட்சி மேல்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று உடல் உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.

உடனடியாக மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு இப்பள்ளியில் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க