• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இல்லம் தேடி கல்வித் திட்டம் – கோவையில் 500 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக சேர்ப்பு

December 15, 2021 தண்டோரா குழு

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில், குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் தன்னார்வலர்களாக 500 கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்து பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் 9 கலைக் குழுக்கள் மூலம், 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போது வரை 500 கல்லூரி மாணவ-மாணவிகள் தன்னார்வலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் 2089 குடியிருப்புகளில், 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அதனால் 8,200 தன்னார்வலர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது வரை 6,471 பேர் பதிவு செய்துள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட பணிகளை திறம்பட செயல்படுத்த மாவட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் செயலி மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க