• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் மரணம்

December 15, 2021 தண்டோரா குழு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவருக்கு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் இன்று காலமானார். இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க