December 15, 2021
தண்டோரா குழு
முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கோவையிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நடத்திவரும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான indware என்னும் டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட் ஸ் ஆகியவை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்தில் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.