• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயற்கை சமநிலையை காக்க வனவிலங்குகளை பாதுகாப்போம் சிந்திக்குமா 6ம் அறிவு !

December 14, 2021 சிராஜ்தீன்

இணையற்ற அளவிலான அறிவை கொண்டவர்களாக நாம் இருப்பதால், இந்த உலகத்தில் உள்ள நுண்மையான பொருட்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையதாகும். ஆனால் அப்படி எதுவுமே நடப்பதில்லை. உண்மையிலேயே மிகவும் வேதனை தருகிறது விஷயம் இது. அவசர காலச் சூழல் என்றும் , வளர்ச்சி என்கிற பெயரில் வன பகுதியில் வாகனத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடும் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக குரங்குகள் , ஒரு காலத்தில் தங்களுக்கு தேவையான உணவுகளை தாமே தேடி உண்டு மகிழ்ந்தன, உணவு தேடி வனத்துக்குள் பரவலாக செல்லும் குரங்குகளின் எச்சத்தால் வனங்கள் செழிப்பாகவும் , பல தாவரங்கள், அழியாமலும் பாதுடுகாப்பாகவும் இருந்தது.ஆனால் மனிதர்கள் தற்போது ஒரு உயிரினத்தின் இயற்கை குனத்தை மாற்றும் போது ஏற்படும் அழிவுக்கு காரணமான செயல்களை செய்வதும் , ஈடுபடுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

சாலையோரத்தில் நிற்கும் குரங்குகளுக்கு கருணை என்ற பெயரில் உணவுகளை கொடுத்து வனவிலங்குகளின் உணவு பழக்க வழக்கங்களை மாற்றி சாலைகளில் செல்கிறது வாகனத்தில் உணவுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் குரங்குகள் காருக்கு குறுக்கே பாய்ந்து இறந்து போகும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறது.இதனால் அவை நம்மிடம் இருந்து உணவு பொருட்களைஎதிர்பார்ப்பதும், பிடுங்கிச் செல்வதும் வழக்கமாகி வருகின்றன. மனிதர்களை தாக்குவதும் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே விலங்குகளை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது சிறப்பு மிக்கவை.

மேலும் படிக்க