• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கர்ப்பிணி வேடமணிந்து சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 13, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பெரியார் மணி என்பவர் நைட்டி அணிந்த படி வயிற்றில் பஞ்சை வைத்து கட்டி கர்ப்பிணி பெண் போன்று வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகப்பேறு திட்டம் மூலம் நிதி உதவியும் அதேபோல் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நிதியுதவியும் ஊட்டச்சத்துக்களும் பல மாதங்களாக தொடர்ந்து வழங்கப்படும் அதேபோல பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர் எனவே உடனடியாக இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று கூறி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க