• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பூட்டிய வீட்டில் ரூ.1.2 லட்சம் கொள்ளை

December 13, 2021 தண்டோரா குழு

கோவையில் பூட்டிய வீட்டில் ரூ.1.2 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகேயுள்ள கூட்டப்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர் வெங்கடராஜ் (44). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். சரவணம்பட்டியில் இவரது வீடு உள்ளது. வெங்கடராஜ் குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருச்செங்கோடுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது. அக்கம் பக்கத்தினர் இது குறித்து வெங்கடராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் சரவணம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தார்.

வீட்டில் பீரோவில் இருந்த 1.2 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வெங்கிடராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டில் யாருமில்லை என தெரிந்து இரவு நேரத்தில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க