• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை இன்று ஆய்வு செய்கிறார் ராணுவ தளபதி !

December 13, 2021 தண்டோரா குழு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஆய்வு செய்கிறார்.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், விமானப் படை தரப்பில் இருந்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமான விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குன்னூருக்கு வருகிறார். முதலில் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

பின்னர், பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

மேலும் படிக்க