December 12, 2021
தண்டோரா குழு
கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில்மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது.ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஆராதனையில் பிரார்த்தனை செய்து வந்தனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு சிறப்பு ஆராதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கிறிஸ்மஸ் விழா தற்போது இருந்தே களைகட்ட தொடங்கியது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் கிறிஸ்து பிறப்பு பற்றிய தேவ வாக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக மெழுகுவர்த்தி ஆராதனை நடத்தப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பின்னர் இயேசு பிறப்பு பற்றி வேத வாசிப்பு நடை பெற்றது.