• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஐ.டி.யு சார்பில் கோவையில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம்

December 10, 2021 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி. சி.ஐ.டி.யு சார்பில் கோவையில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோவையில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், ஹோப்ஸ் உள்ளிட்ட வெவ்வேறு சிக்னல்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடத்தினர்.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க