• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.ஜி. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸ் துவக்கம்

December 5, 2021 தண்டோரா குழு

கோவை கே.ஜி. மருத்துவமனையில்அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸ் துவங்கப்பட்டது.

பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகளில், அவசர சிகிச்சை என்பது முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு துறையாக உள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்பு, நெஞ்சு வலி , சாலை விபத்து,எலும்பு முறிவு,மூச்சுத்திணறல் போன்ற அவசர கால மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில்,ஒவ்வொரு பல்நோக்கு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

அதே நேரத்தில் இது குறித்து முறையான சிகிச்சை அளிக்கும் விதமாக ,கடந்த 47 வருடங்களாக சிறந்த சேவை வழங்கி வரும், கே ஜி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான அவசர சிகிச்சை பிரிவு முதுகலை பட்டபிரிவு கோர்ஸ் துவங்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் மற்றும் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவின் முதுகலை பட்ட படிப்பு கோர்ஸை துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க