• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

December 4, 2021 தண்டோரா குழு

கோவையில் காந்திபுரம் டவுன்ஹால் பெரிய கடை வீதி ரயில் நிலையம் லட்சுமி மில் சின்னியம்பாளையம் பீளமேடு இடையர்பாளையம் வடபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்று வருகிறது. அலுவலகம் சென்று வீட்டுக்கு திரும்பியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர்கள் பல்வேறு பகுதிகளில் நின்று போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது.அதேபோல ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் கடைகளையும் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதிகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கிராஸ்கட் சாலையில் 700 கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க