• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

December 2, 2021 தண்டோரா குழு

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர்,

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து கடுப்பாடுகளுக்கு தற்போது அவசியம் இல்லை.தடுப்பூசி போடுவதில் நாட்டில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது.முதல் தவனை தடுப்பூசி 78%, இரண்டாம் தவனை தடுப்பூசி 44% என்ற அளவில் உள்ளது. கோவை தடுப்பூசி போடுவதில் மாநிலத்தில் முதலாவதாக உள்ளது. டெங்குவிற்கு 617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தடுப்பூசி போடுவதில் தமிழகம் ஒரு இயக்கமாக செயல்படு வருகிறது. தமிழக முதல்வரே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் 3.2 லட்சம் டேத்பாக் கிட்டுகள் கையிருப்பில் உள்ளது.மேலும் ஒரு லட்சம் கிட்டுகள் வரவழைக்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கி வருபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒமைக்க்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை4 கோடி செலவில் உருவாக்கப்பட மரபணு சோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது. ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ளும் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது.மக்கள் அச்சம் அடைய வேண்டாம். ஒமைக்ரான் வைரஸ் செய்தி அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதல்வர் அறிவுறித்தினார்.

பல வகையான வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனாவும் உருமாறியுள்ளது. காலையில் மதுரை, திருச்சியை தொடர்ந்து தற்போது கோவை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் உள்ளிட்ட முழுமையான சோதனை செய்யப்படுகிறது.பரிசோதனை முடிந்தும் வீட்டு கண்காணிபில் இருப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க