• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறை தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 40க்கும் மேற்பட்ட யானைகள்

December 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையில் 40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் இன்று வனப்பகுதிக்குள் இருந்து திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன யானைகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் வருவதைப் பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இதனால் அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது வனத் துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் வால்பாறையில் முதல்முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் ஒரே இடத்தில் எனவே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.இந்தப் பகுதியில் இருந்து யானைகள் அடுத்த பகுதிக்கு செல்லும்போது குடியிருப்பு பகுதிகள் நுழையாதவாறுவனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாலை வேளையில் தொழிலாளர்கள்அனைவரும் தங்கள் வீட்டின் முன்புறம் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க