• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கல்

December 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் இன்று கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற 50 ஆயிரத்து 751 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் முதலவரால் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 425 பயனாளிகளுக்கு ரூ.7.06 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.9000 மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை, 108 பயனாளி ரூ.27 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.500 மதிப்பில் கண்கண்ணாடி, 963 பயனாளிகளுக்கு ரூ.10.03 லட்சம் மதிப்பில் ஓய்வூதியம் என மொத்தம் 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தொழிலாளர் நலத்துறை(சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க