• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

November 30, 2021 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(41). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பிகே புதூர் வீரவிநாயகர் கோயில் அருகே சுவரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார். அப்போது இருட்டாக இருந்ததால் பைக்கின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு போஸ்டர் ஒட்டினார்.

அந்த வழியாக வந்த சில வாலிபர்கள் ‘கண் கூசுகிறது, லைட்டை ஆப் பண்ணு’ என கூறி தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி அவரை சரமாரியாக தாக்கி மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து செந்தில்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் வழக்குபதிவு செய்து இடையர்பாளையம் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சூர்யா(23), சர்ச் தெருவை சேர்ந்த வினேஷ்(24), பிகே புதூர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த விகாஷ்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள விகாஷ் தந்தை சித்திரகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க