• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மா யாகம்

November 30, 2021 தண்டோரா குழு

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வட மாநிலத்தவரான காஷ் மனோத் யானைகள்காகவே சிறப்பு யாகம் நடத்தினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நவக்கரை பகுதியில் ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. எனவே யானைகள் இறக்காமல் இருப்பதற்காகவும் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும் அவர் யானை காக மா யாகம் என்ற சிறப்பு யாகத்தை நடத்தி உள்ளார்.

இதற்கு முன்பு ரயில்களால் உயிரிழந்த யானைகளின் புகைப்படங்களை வைத்து யாகம் நடத்தினார். மேலும் மத்திய அரசு உடனடியாக வனப்பகுதியில் செல்லும் ரயில்கள் குறைவான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன உயிரினங்கள் எந்த விபத்திலும் சிக்காமல் உயிர் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க