• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

48 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற பெண்

November 26, 2021 தண்டோரா குழு

கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (75). இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது,:-

எனது பக்கத்து வீட்டில் விருதுநகரை சேர்ந்த செந்தில்குமாரி என்பவர் வசித்து வந்தார். ஆன்லைன் மூலமாக வர்த்தகம் செய்து வந்தார். இந்த நிலையில் தொழில் தேவைக்காக என்னிடம் இருந்து ரூ 17 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இதுவரை திருப்பித் தரவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த செந்தில்குமாரி வீட்டிலிருந்த 48 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டார். எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்டு ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் அவரை ஏமாற்றி பணம் பெற்று 48 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்க