• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தருமபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து முதற்கட்ட ஆய்வு – கைத்தறித்துறை அமைச்சர் தகவல்

November 24, 2021 தண்டோரா குழு

கைத்தறி மற்றும் துணிநூல் தறை அமைச்சர் காந்தி தலைமையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழக (சிட்ரா) கூட்டரங்கத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் பேசியதாவது:

தமிழக பெரிய அளவான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசால் சமீபத்தில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான 1 சதவீதம் வேளாண்மை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

துணி பதனிடுதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். பருத்தி நூல் விலையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நூல் தட்டுபாட்டைக் களைதல் வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் குறித்து தொழில் முனைவோர்களுடன் கவந்தாலோசிக்கப்பட்டது.

நாட்டில் 7 பெரிய அளவிலான ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் ரூ.4445 கோடி மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளில் அமைக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு தற்சமயம் முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நூற்பு, நெசவு, துணி பதனிடுதல், சாயமிடுதல், அச்சிடுதல், ஆடைகள் உற்பத்தி ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு வகை செய்து தமிழகத்தில் உலக தரத்திலான தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீடுகளை ஈர்த்து பெருமளவில் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஜவுளி தொழில் வசதிகளுடன் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் ஜவுளி தொழிலுக்கு தேவையான தொழிற்சாலை, மனைப்பிரிவுகள், சாலைகள், மின்சாரம், தண்ணீர். பொது பதனிடுதல் கூடம். பொது சாயக்கழிவு நீர் நிலையம், வடிவமைப்பு மையம். ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் மையமாக ஏற்படுத்தப்படும்.

பணியாளர்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள், போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் இந்த பூங்காவில் வழங்கப்படும். இந்த பூங்காவானது, மொத்த நிலப்பரப்பில் 50சதவீதம் பரப்பளவை உற்பத்தி நடவடிக்கைகளுக்கும். தமிழகத்தில் இந்த மெகா பூங்காவினை தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைப்பது குறித்து முதற்கட்டமாக ஆராயப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில் கைத்தறி,கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்தர் பிரதாப் யாதவ், துணிநூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ், மாவட்ட கலெக்டர் சமிரன், ஜவுளி துறை பிரதிநிதிகள், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், பின்னலாடை தொழில் அதிபர்கள், சிறு,குறு நூற்பாலைகள் பிரதிநிதிகள், கரூர் ஏற்றுமதி சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய மாநில அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த கருத்துகள் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க