• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மண் பரிசோதனை

November 24, 2021 தண்டோரா குழு

கோவையில் 144 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் திட்ட செயல்படுத்துவது தொடர்பாக aஅண்மையில் சர்வே பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ. தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ. தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ. தூரத்திற்கும், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வரை 8 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமாக 144 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் அண்மையில் சர்வே பணி நடைபெற்றது.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சார்டிலைட் உதவியுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம், அவினாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மண் பரிசோதனை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண் பரிசோதனை பணிகளை முடிந்ததும் முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க