• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாலிபருக்கு கத்திக்குத்து

November 13, 2021 தண்டோரா குழு

கோவையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(23). இவர் நேற்று புலியகுளம் சடையப்பன் தெருவில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தினர்.

இதில் அவருக்கு தலை, கை உள்பட இடங்களில் குத்து விழுந்தது. பின்னர் அவர்கள் மணிகண்டன் மற்றும் மாரியப்பனை மிரட்டி விட்டு சென்றனர். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக மணிகண்டன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கஞ்சா விற்பனையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள வினோத், மனோஜ் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க