• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

November 13, 2021 தண்டோரா குழு

ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் மற்றும் அன்னை மருத்துமனை இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் கோவையில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் நவம்பர் 14 தேதி முழுவதும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கபடுகிறது.இந்நிலையில் கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் மருத்துவமனையின் தலைவர் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கே.எஸ்.மகேஸ்வரி, தலைமை மருத்துவர்,சி.டி.செந்தில் நாதன் மற்றும் மருத்துவமனையின் இயக்குனரும்,உடல் பருமன் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பால முருகன் தலைமை ஆகியோர் தாங்கினா். ரோட்டரி மெரிடியன் தலைவர் மதன கோபால் சிறப்புரையாற்றினார்.

சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாமில் கலந்து கொண்டவர்களிடம் சர்க்கரை நோய் குறித்த பல்வேறு சந்தேகங்கள் மற்றும் மருந்துகள் எடுத்து கொள்ளும் முறை,உணவு கட்டுப்பாடு என பொதுமக்களின் கேள்விகளுக்கு சிறப்பு மருத்துவர் பிரேம் பால குரு விளக்கமளித்தார். தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சாப்பாட்டிற்கு முன் பின் என சர்க்கரை நோய் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாதிரி உணவு பட்டியல் மற்றும் டயாபடிக் புரோட்டின் பவுடர் இலவசமாக வழங்கப்பட்டது.காலை துவங்கி மாலை வரை நடைபெற்ற சிறப்பு முகாமில்,ராஜ வீதி,செல்வபுரம், காந்திபார்க் என பல்வேறு பகுதகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.

மேலும் படிக்க