• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாணவர்கள் போராட்டம்

November 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு அமைப்புகள், சக மாணவிகளின் உறவினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்த போது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் சொல்ல கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து தொலைபேசியிலும் குறுந்தகவல் அனுப்பிய தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

மேலும் படிக்க