• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டில் பீரோவை உடைத்து 6.5 பவுன் நகை கொள்ளை

November 11, 2021 தண்டோரா குழு

கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவரது கணவர் ஆண்டு இறந்து விட்டார், பொன்னம்மாளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும், திருமணம் முடிந்து விட்டது. மூத்த மகள் சுமதி, அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பொன்னம்மாள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு சுமதியின் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி சென்று விட்டார், நேற்று இரவு 7 மணி அளவில் பொன்னம்மாள் தட்டாம்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 6.5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அதை யாரோ மர்மஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னம்மாள் அளித்த புகாரின்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க