• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வளர்ப்பு நாயை கடுமையாகத் தாக்கிய நபர்.! காவல் நிலையத்தில் புகார்.! புகார் அளித்தவருக்கு நடந்த கொடூரம்.!

November 11, 2021 தண்டோரா குழு

கோவையில் வீட்டு உரிமையாளரால் வளர்ப்பு நாய் தாக்கப்படுவதை தடுக்க புகார் அளித்த நபரின் காலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட பிள்ளையார் புரம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் தன்னுடைய வளர்ப்பு நாயை தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை பார்த்து மனவேதனை அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த நவீன் மேகா தம்பதியினர், விலங்குகள் நலவாரிய பொறுப்பாளர் பிரதீப்பிடம் கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த சம்பவத்தின் வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் போத்தனூர் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் அளித்தார். இதன்பேரில் நாயின் உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ் வீடியோ பதிவு கொடுத்த நவீன் மேகா வீட்டிற்குள் நேற்று சென்றார். இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து சதீஷ் நவீன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இதில் நவீனின் கால் முறிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க