• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வரின் களப் பணியாற்றி வரும் அவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது – த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி

November 9, 2021 தண்டோரா குழு

தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமுமுக சார்பில் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக,கோவையில் தமுமுக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மத்திய மாவட்ட தமுமுக சார்பாக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சென்னை மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு தமிழக முதல்வரின் களப் பணியாற்றி வரும் அவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

மேலும் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். அவர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,கோவையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். உக்கடம் 86வது வார்டில் கழிவு நீர் லாரி அங்கு கழிவுகளை கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வைரஸ் நோய், பன்றி காய்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக உடனடியாக தீர்வு காண வேண்டும்.

தமுமுகவை பொறுத்த வரை சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது, எங்களின் தொண்டர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமுமுக சார்பில் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையிலும் மீட்புக்குழு அமைக்கப்பட்டு தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் களப்பணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்..இதில் தமுமுக மாவட்ட செயலாளர் கபீர், துணை செயலாளர் ஆசிக் அஹமது, பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க