• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழைநீர் தங்குதடையின்றி செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

November 8, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்கு தேவையான பணிகளை செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளை தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்வதையும், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் வரும் வெளியேற்றப்பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றிடவும்,

ஒவ்வொரு மண்டலத்திலும் ஜே.சி.பி.இயந்திரங்கள் ஓட்டுநருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் ஆபரேட்டர்கள் தயாராக இருக்க வேண்டும். இதனை உதவி கமிஷனர்கள் மற்றும் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

அதே போல் கோவை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஏற்படும் நீர் தேங்குதல், கழிவு நீர் கால்வாய் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்புடைய புகார்கள் தொடர்பாக மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2215618, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2595950, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551800, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705 ஆகியவற்றிக்கு புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது மண்டல உதவி கமிஷனர்கள் சுந்தர்ராஜன் (மத்தியம்), செந்தில்குமார் ரத்தினம்(கிழக்கு), அண்ணாதுரை (தெற்கு), உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, சுந்தர்ராஜன், பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க