• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

November 8, 2021 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவி சவுந்தர்யா செங்கதிரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, ஸ்ரீ பாலரிஷி பீடம் விஸ்வாசிரஸணி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். சவுந்தர்யா செங்கதிர், பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை எலக்ட்ரானிக் மீடியா பயின்று வருகிறார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியில் குரு மிருதுளா ராயிடம் பரதநாட்டியம் பயின்று வருகின்றார். அரங்கேற்ற நிகழ்ச்சியில் இவரின் பரதநாட்டியத்தில் பல்வேறு முகபாவனைகளை இவர் வெளிப்படுத்தினார்.முடிவில் நடன மாணவிகளை அனைவரும் பாராட்டி கவுரவித்தனர்.பரத நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க