• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது அருந்திய 3 பேர் பலி – மதுபானத்தில் தின்னர் கலந்து குடித்தனரா என போலீசார் விசாரணை

November 5, 2021 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55), சக்திவேல் (61). பார்த்திபனும், சக்திவேலும் பெயிண்டர்கள். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்தார். நண்பர்களான மூவரும் தீபாவளியையொட்டி கடந்த 3ம் தேதி இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர்.நேற்று காலை 6 மணி அளவில் 3 பேரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மதுவை பிளாக்கில் வாங்கியுள்ளனர்.

அருந்ததியர் வீதி அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தினர். பின்னர் சக்திவேல் அந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையிலும், முருகானந்தம் பாரதியார் சாலையிலும் மயங்கி விழுந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர். இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடியபோது அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் பாதி அருந்திய நிலையில் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டிலை கைப்பற்றிய போலீசார் அந்த மதுபானத்தை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேரும் மது அருந்திய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், உயிரிழந்த 3 பேரும் போதைக்காக மதுபானத்தில் ‘தின்னர்’ கலந்து குடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் குடித்த மதுபானம் 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடக்கறிது. இதனிடையே 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இன்னும் ஒரிரு நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 3 பேரும் அருந்திய மதுபான வகைகளை மட்டும் தற்காலிகமாக விற்காமல் நிறுத்தி வைக்க டாஸ்மாக் கடைகளுக்கு கோவை டாஸ்மாக் உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க