• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 1700 டன் குப்பைகள் அகற்றம்

November 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேர்வது வழக்கம். இதனிடையே கடந்த 4ம் தேதி தீபாவளி கொண்டாப்பட்டது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பறிமாறியும் தீபாவளியை கொண்டாடினார்கள். இதனால் கூடுதலாக 600 டன் முதல் 700 டன் வரை குப்பைகள் சேர்ந்தன. இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான தூய்மைபணியாளர்கள் இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வழக்கமாக கோவை மாநகராட்சியில் 1000 டன் அளவுக்கு குப்பைகள் குவிவது வழக்கம். இந்த குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது தீபாவளியை தொடர்ந்து கூடுதலாக 700 டன் குப்பைகள் சேர்ந்தன. இந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன,’’ என்றார்.

மேலும் படிக்க