• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2533 நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19.77 லட்சம் மதிப்பீட்டில் சீருடை

November 3, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2533 நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19 லட்சத்து 77 ஆயிரத்து 757 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கும் பணியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,

‘‘கோவை மாநகராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரம் பேணும் வகையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு செட் சீருடைகள், காலனி மற்றும் சீருடைகளுக்கான தையற்கூலி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக அரசு துறை நிறுவனத்தின் மூலம் 2533 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.19.77 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படவுள்ளது,’’என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க