• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1000 களப்பணியாளர்கள்

November 2, 2021 தண்டோரா குழு

மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளிலும் களப்பணியில் ஈடுபட 1000 பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்

‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்தும் தெளிப்பார்கள். வார்டுக்கு 10 பேர் விதம் இப்பணியில் ஈடுபட உள்ளனர் ‘என்றார்.

மேலும் படிக்க