• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

October 21, 2021 தண்டோரா குழு

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதித்திருந்தது. ஆகையால் கோவையில் டீக்கடைகள், பேக்கரிகள் ஹோட்டல்கள், மளிகைகடைகள். மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு கோவை மாநகராட்சி தடை விதித்து அவ்வப்போது மேற்குறிப்பிட்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடகோவை பகுதியில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு செயல்பட்டு 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி வருவது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தியதற்காக அக்கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ 15,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க