• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

October 21, 2021 தண்டோரா குழு

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதித்திருந்தது. ஆகையால் கோவையில் டீக்கடைகள், பேக்கரிகள் ஹோட்டல்கள், மளிகைகடைகள். மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதற்கு கோவை மாநகராட்சி தடை விதித்து அவ்வப்போது மேற்குறிப்பிட்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடகோவை பகுதியில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு செயல்பட்டு 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தி வருவது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தியதற்காக அக்கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ 15,000 அபராத தொகையாக விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க