• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

October 21, 2021 தண்டோரா குழு

கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பணியில் இருக்கும்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம், மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று காலை கோவை போலிஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவு தூணிற்கு மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

குறிப்பாக கடந்த ஆண்டு 01-09-2020 முதல் 31-08-2021 வரை இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்கமும், அஞ்சலியும், செலுத்தப்பட்டது.

இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோதர்,கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், உட்பட காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு நினைவுதூண் அருகே வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு முறைப்படி 60 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து 30 காவல்துறையினர் கலந்துகொண்டு இசை வாத்தியங்களை இசைத்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் படிக்க