• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – உறவினர்களை சந்திக்க அனுமதித்த 7 பேர் பணியிடை நீக்கம்

October 21, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க காவல்துறையினர் அனுமதித்தனர்.

இந்நிலையில்,விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க