• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

October 20, 2021 தண்டோரா குழு

கோவையில் இரு வீடுகளில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சின்னியம்பாளையம் சின்னதோட்டம் தெருவை சேர்ந்தவர் கவிதா (45).

இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் உடுமலைப்பேட்டையில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்கம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து கவிதா பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சூலூர் கொங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பானுபிரியா (30). இவர் சம்பவத்தன்று சிங்காநல்லூரில் உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். அங்கு பானுபிரியா 7 பவுன் தங்க நகைகளை கழட்டி பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நகைகள் காணவில்லை. இது குறித்து பானுபிரியா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க