• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

October 20, 2021 தண்டோரா குழு

கோவையில் இரு வீடுகளில் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சின்னியம்பாளையம் சின்னதோட்டம் தெருவை சேர்ந்தவர் கவிதா (45).

இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் உடுமலைப்பேட்டையில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்கம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து கவிதா பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சூலூர் கொங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பானுபிரியா (30). இவர் சம்பவத்தன்று சிங்காநல்லூரில் உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். அங்கு பானுபிரியா 7 பவுன் தங்க நகைகளை கழட்டி பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நகைகள் காணவில்லை. இது குறித்து பானுபிரியா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க